Pitha Pirai Soodi

Pitha Pirai Soodi

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
1

Best deals from amazon today

நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை
பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
2
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை
பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
3
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
4
பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாது பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
5
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
6
ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய்
வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
7
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
8
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழுவார்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
9
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே?
10