
Back to Album
Kannale Parum Ayya
Tamil Lyrics
English Lyrics
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
ஐயா உன் திருமேனி வழிகின்ற நெய்யாகி
கண்டத்து மணியாகி சந்தனம் நானாகும்
அக்காலம் என்றென்று காத்திருப்பேனே
ஆவல் கொண்டு ஆண்டாண்டு மலை வந்தேனே
உருகி நின்றேனே அவயம் கேட்டேனே
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
மணிகண்டன் புகழாரம் பொழுதெல்லாம் சூடாமல்
சாஸ்தா உன் திருநாமம் வாயாரப் பாடாமல் மண் மேலே
ஒருபோதும் நான்தான் வாழ்வேனா
தடுத்தாலும் மாலை போடாமல் இருப்பேனா
உன்னை மறப்பேனா மனதில் நிறைப்பேன் நான்
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா…
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா