Sabarimalai Agaraathi

Sabarimalai Agaraathi

சபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின் விளக்கங்கள்

Best deals from amazon today

1) சொரிமுத்தைய்யன் கோவில் – சாஸ்தாவின் மூலாதார சக்ர கோவில்
2) அச்சன்கோவில் – சாஸ்தாவின் ஸ்வாதிஷ்டான சக்ர கோவில்
3) ஆரியங்காவு – சாஸ்தாவின் மணிபூரக சக்ர கோவில்
4) குளத்துப்புழை – சாஸ்தாவின் அநாகத சக்ர கோவில்
5) எருமேலி – சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில்
6) சபரிமலை – சாஸ்தாவின் ஆக்ஞா சக்ர கோவில்
7) காந்தமலை ( பொன்னம்பல மேடு ) – சாஸ்தாவின் ஸஹஸ்ரார ( பிரம்மாந்திரம் ) சக்ர கோவில்
8) இருமுடிக்கட்டு – பாவ புண்ணியங்களை இருமுடிக்கட்டாக எடுத்து செல்லும் புனிதமான வழிபாடு
முன் முடியில் ஐயப்பனின் நைவேத்ய பொருட்களும்
பின் முடியில் வழித்தேவைக்கான பொருட்களும் இருக்கும்
9) புத்தன் வீடு – எருமேலியில் உள்ளது
மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடம் மகிஷியை வதம் செய்த ஐயப்பனின் வாள் இன்றும் புத்தன் வீட்டில் தரிசிக்கலாம்
10) பேட்டைத் துள்ளல் – முதன்முறை சபரி செல்லும் கன்னிச்சாமிகள் உடல் முழுவதும் பல வண்ணங்கள் பூசி ஆடும் ஆட்டம்
11) பேரூர் தோடு – இரும்பொன்னி கரையில் உள்ள சிவன் கோவில் இங்கு குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு பொரி செலுத்தி பிரார்த்திக்கும் இடம்
13) காளைகட்டி ஆசிரமம் – மகிஷி வதத்தை சிவபெருமான் காளையை இந்த இடத்தில் கட்டி பார்த்த இடம்
14) இஞ்சிப்பாறைக் கோட்டை – பெருவழியில் உள்ள ஒரு பாறையின் பெயர்
15) இடைத்தாவளம் – இளைப்பாறும் இடம்
16) அழுதா நதி – பம்பை நதியின் கிளை நதி
17) கல்லிடங்குன்று – கன்னிசாமிகள் அழுதாநதியில் மூழ்கி கல் எடுத்து கல்லிடங்குன்றில் சேர்க்கும் பிரார்த்தனை செய்யும் இடம்
18) கரிவலந்தோடு – பெருவழியில் உள்ள இடம்
19) கரிமலை – பெருவழியில் உள்ள உயர்ந்த மலை
20) உடும்பாறைக் கோட்டை – கரிமலை தொடக்கத்தில் உள்ள கோட்டை
23)பெரியானை வட்டம் – யானைகள் தங்குமிடம்
24) சிறியானை வட்டம் – யானைகள் தங்குமிடம்
25) பம்பா நதி – சபரிமலை அடிவாரத்தில் ஓடும் புண்ணிய நதி
ஸ்வாமி ஐயப்பன் அவதரித்த திருத்தலம்
26) பம்பா சத்யா – பம்பைக்கரையில் நடத்தப்படும் அன்னதானம்
27) அம்பலப்புழா – எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய குழு
28) பந்தளம் – ஐயப்பன் வளர்ந்த ஊர்
29) அம்பலப்புழா கோவில் – பந்தள அரண்மனைக்குள் உள்ள கோவில்
30) ஆலங்காட்டு சங்கம் – எருமேலியில் பேட்டை துள்ளி மலையேறும் சங்கம்
இச்சங்கம் ஆனது ஆலங்காட்டு யோகம் என்றும் அழைக்கப்படுகிறது
31) இரும்பூன்னிக்கர – பெருவழியில் உள்ள ஊர்
32) உதயணன் – உடும்பாறைக் கோட்டையில் வாழ்ந்து வந்த ஒரு கொள்ளைக்காரன்
33) இலவந்தோடு – உடும்பாறைக் கோட்டைக்கு அடுத்த இடம்
34) எலவந்தாவளம் – புதுச்சேரி ஆற்றின் ஓரம் அமைந்த இடம்
35) ஐயப்பன் குரு கோவில் – ஐயப்பன் குருகுலவாசம் செய்த இடம்
பந்தளத்தில் இருந்து
4கிமீ தூரத்தில் உள்ளது
36) கன்னிச்சாமி – முதல்முறை சபரியாத்திரை செல்லும் பக்தர்
37) குருசாமி – சபரியாத்திரைக்கு வழிநடத்தி செல்பவர்
38) குருநாதன் முகடு – ஐயப்பனுக்கு ஆயுதபயிற்சி அளித்த குரு சமாதியடைந்த மலை
39) சீரப்பஞ்சிரா மூக்கன் – ஐயப்பனுக்கு ஆயுதப்பயிற்சியும் மல்யுத்தமும் அளித்தவர்
40) புலிக்குன்னு தாயின் தலைவலிக்கு புலிப்பால் கொண்டு வரும் வழியில் ஐயப்பன் புலிகளோடு தங்கிய மலை
41) பூரணை புஷ்களை – சாஸ்தாவின் இரு தேவியர்
42) பூதநாத கீதை – ஐயப்பன் பந்தள மன்னனுக்கு உபதேசித்த ஆன்மீக தத்துவங்கள்
43) நீலிமலை – பம்பையை தாண்டியவுடன் ஏறும் முதல் மலை
44) முக்கால் வட்டம் – சீரப்பஞ்சிராவிற்கு அருகில் உள்ள கோவில்
45) முக்குழி – பகவதி கோவில் உள்ள இடம்
46) வாபூரன் – சாஸ்தாவின் சிவகண தலைவன்
47) வலியம்பலம் – பெரிய கோவில்
48) வலியக்கோவில் கல் – பந்தளராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய கோவில்
49) ராஜசேகர பாண்டியன் – பந்தள ராஜா ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை
50) அப்பாச்சி மேடு – நீலிமலைக்கு அடுத்த மலை
51) அம்பலப்புழா வேலகழி – தாள லயத்துடன் கற்றுத்தரப்படும் ஆயுத பயிற்சி
52) ஆறாட்டு – ஐயப்பன் பம்பை நதியில் நீராடி செல்லும் விழா
53) சபரி பீடம் – பெண் துறவியான அன்னை சபரி வாழ்ந்த இடம்
54) சரங்குத்தி ஆல் – எருமேலியில் இருந்து எடுத்து வந்த அம்பு சரங்களை சமர்ப்பிக்கும் இடம்
55) காணிப்பொன் – ஐயப்பனுக்கு செலுத்தும் குருதட்சணை
56) உஷபூஜை – காலை நேர பூஜை
57) ஐயப்பன் விளக்கு – முதன்முறை சபரியாத்திரை செல்லும் கன்னிசாமிகள் பம்பையில் நடத்தும் வழிபாடு
58) களபாபிஷேகம் – தைமாதம் 5ம்தேதி பந்தள மன்னர் முன்னிலையில் சாஸ்தாவுக்கு செய்யப்படும் சந்தனாபிஷேகம்
59) திருவாபரண பெட்டகம் – சங்கராந்தி தினத்தன்று ஐயப்பனுக்கு சாற்றப்படும் நகைகள் உள்ள பெட்டகம்
60) ஐயப்பன் மந்திரம் – ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதவி ஏற்கும் மேல்சாந்திக்கு தந்திரி சொல்லிக் கொடுக்கும் மந்திரம்
61) கல்பாத்தி கோவில் – ஐயப்பனுக்கு தேரோட்டம் நடைபெறும் முக்கியமான கோவில்
62) குருதிபூஜை – மாளிகைபுறத்தில் நடத்தப்படும் பூஜை
63) கொச்சுக் கடுத்தன் – ஐயப்பனின் போர்வீரன்
64) கொச்சம்பலம் – சிறிய கோவில்
65) கோப்தா – சாஸ்தாவின் பரிவார தேவதை
66) பூங்காவனம் – சபரிமலை கோவிலையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் அழைக்கும் சொல்
67) கோட்டைப்படி – தர்மசாஸ்தாவின் பூங்காவன நுழைவாயில்
68) நந்தவனம் – சபரிமலை ஐயப்பனின் பூங்காவனம்
69) கொச்சுவேலன் – ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர்
70) சரப்ப்பாட்டு – பக்தர்களின் சர்ப்பதோஷம் நீங்க மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் பாடும் பாட்டு
71) சகஸ்ர கலசாபிஷேகம் – 1008 கலசங்கள் வைத்து பூஜித்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் வழிபாடு
72) சரணம் அய்யப்பா – ஐயப்பனை வழிபடும் மந்திரம்
73) ஸ்வாமி சரணம் – எதிர்ப்படும் அய்யப்பமார்களை ஐயப்பனாக கருதி வழிபடும் சரணம்
74) சாஸ்தா பாட்டு – ஐயப்பனின் அருட்சரித்ரம்
மலையாளத்தில் ஏழு பாகங்களாக உள்ளது
75) சிரம்பிக்கல் மாளிகை – பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரண்மனை
76) சின்முத்திரை – ஐயப்பனின் வலதுகரம் காட்டுவது
இரண்டு விரல்களை ( ஆட்காட்டி விரலை பெருவிரலோடு ) மடக்கி மூன்று விரல்களை
( சுண்டுவிரல் ; மோதிரவிரல் ; நடுவிரல் )நிமிர்த்தி காட்டும் முத்திரை
( ஆணவம் ; கண்மம் ; மாயை அகற்றி ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது )
77) சீனித்தாவளம் – பெருவழியில் இரண்டு பெரிய சீனிமரங்கள் உள்ள இடம்
78) சீவேலி – சன்னதியை சுற்றி வரும் ஸ்வாமியின் ஊர்வலம்
79) சுக்குப்பாலம் – பெருவழியில் உள்ள ஒரு பாலத்தின் பெயர்
80) தலப்பாற மலா – பெருவழியில் உள்ள கோவில்
இதற்கு அரசுமுடிக்கோட்டை என்ற பெயரும் உண்டு
81) தாழமண் குடும்பம் – ஐயப்பனுக்கு செய்யும் பூஜைகளுக்கு தலைமை பொறுப்பேற்கும் நபர்
82) திரிவேணி சங்கமம் – பம்பையில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்
83) திருவெள்ளக்காவு ; சாமரவட்டம் ; நெட்டிசேரி – கேரளாவில் சாஸ்தா கோவில் உள்ள இடங்கள்
84) பறைக்கொட்டி பாட்டு – பக்தர்களின் தோஷம் விலக மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் செய்யப்படும் வழிபாடு
85) பாண்டித்தாவளம் – மாளிகைபுறம் சன்னதி அருகே மதுரை நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் இடம்
86) பஸ்மக்குளம் – சபரிமலை அடிவாரத்தில் இருக்கும் புண்ய தீர்த்த குளம்
87) உரல்குழி தீர்த்தம் – சன்னிதானத்தில் இருந்து 1கி.மீ தொலைவில் கும்பளம்தோட்டில் உள்ள அருவி
88) நடை – சன்னிதானம்
89) பிரதிஷ்டை தினம் – வைகாசி மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்
அன்று ஒருநாள் மட்டும் நடை திறக்கப்பட்டு தரிசனம் கிடைக்கும்
90) பெரிய கருப்பர் – ஐயப்பனின் பாதுகாவலர்
91) பெருநாடு ஐயப்பன் கோவில் – பத்தனந்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் மடத்துக்குழி என்ற இடத்தில் இருந்து 2கி.மீ தொலைவில் உள்ள ஐயப்பன் கோவில்
இங்கு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்
ஐயப்பனுக்கு திருவாபரணம் இங்கும் அணிவிக்கப்படுகிறது
92) பொன்னம்பல மேடு – தை சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தரும் மகரஜோதி தெரியும் மலை
93) நாயாட்டு விளி – பதினெட்டாம்படியின் கீழ் நடத்தப்படும் சாஸ்தாவின் கதையை பாடும் ஒரு சடங்கு
94) மகரஜோதி – ஐயப்ப தரிசனத்தின் சிகர நிகழ்ச்சி
பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி
95) மகர நட்சத்திரம் – மகர ஜோதிக்கு சில நிமிடத்திற்கு முன்பு வானில் தெரியும் நட்சத்திரம்
96) கிருஷ்ண பருந்து – ஐயப்பனின் ஆபரணபெட்டியோடு சேர்ந்து வானில் வட்டமிட்டு பறந்து வரும் கருடன்
97) மகர சங்கரம பூஜை – தைமாதம் முதல் தேதி சூரியபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் நடத்தப்படும் பூஜை
98) மகாகாளன் ; பீமரூபன் – சாஸ்தாவின் முக்கிய பரிவாரங்கள்
99) மேல்சாந்தி – முக்கிய அர்ச்சகர்
புறப்படா சாந்தி என்ற பெயரும் இவருக்கு உண்டு
பதவி ஏற்றதில் இருந்து வீட்டிற்கு செல்லாமல் சபரிமலையில் இருப்பதால் இவருக்கு இந்த பெயர்
100) மண்டல காலம் – கார்த்திகை முதல்தேதி முதல் மார்கழி 11ம்தேதி வரை உள்ள நாட்கள்
101) மரக்கூட்டம் – சபரிபீடத்திற்கு அடுத்த இடம்
102) விரி – தங்கும் இடம்
103) சுப்ரபாதம் – ஐயப்பனின் திருப்பள்ளியெழுச்சி பாடல்
104) ஹோமகுண்டம் ( அக்னிகுண்டம் ) – நெய்யபிஷேகம் செய்த பிறகு தேங்காய் மூடிகளை அர்ப்பணம் செய்யும் ஆழி
105) நெய்யபிஷேகம் – ஐயப்பனுக்கு செய்யப்படும் முக்கிய அபிஷேகம்
106) நெய்த்தேங்காய் – ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் அடைத்து செல்லும் காய்
107) நெரபுத்திரி – அறுவடைத் திருநாள் பூஜை
108) விஷூ – மலையாள வருடப்பிறப்பு
109) விஷூ கைநீட்டம் – ஆண்டுதோறும் நல்லது நடக்க ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜித்த காசுகளை அர்ச்சகர் கையால் பெறும் சடங்கு
110) அஷ்டாபிஷேகம் – ஐயப்பனுக்கு செய்யும் எட்டு வகை அபிஷேகங்கள்
111) படி பூஜை – சபரிமலையில் உள்ள சத்யமான பொன்னு பதினெட்டு படிகளுக்கு நடத்தப்படும் பூஜை
112) ஸ்ரீபூதநாத சரிதம் – ஸ்ரீ கூ.மு. முத்துஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய ஐயப்பனை பற்றிய சமஸ்க்ருத நூல்
113) ஹரிஹராத்மஜாஷ்டகம் – அர்த்தசாம பூஜைக்கு முன் நடைசாத்தும் முன் பாடப்படும் பாடல்.