Ayyappanin Malaikku

Ayyappanin Malaikku

ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி

Best deals from amazon today

ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
பலவருஷம் மலைக்கு போன‌ பழுத்த‌ சாமியை
பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும்
குருவாக‌ அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும்
துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும்
காலையிலே நீராடி நீரணியணும்
கன்னிமூல‌ கணபதியை நீ நினைக்கணும்
மாலையை குரு கையாலே நீ அணியணும்
மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும்
ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
ஆறுவாரம் கடுமையாக‌ நோன்பிருக்கணும்
ஆடையிலே கருப்பு நீலம் நிறமிருக்கணும்
ஆடையிலே காவி நீலம் நிறமிருக்கணும்
காலையிலும் மாலையிலும் கோவில் போகணும்
ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
கட்டாயும் ஆசைகளை அடக்கி வைக்கணும்
அனுதினமும் பஜனைகளில் கலந்து கொள்ளணும்
அன்னதானம் முடிஞ்சவரை நீ செய்யணும்
இருமுடியை உந்தலையில் நீ சுமக்கணும்
இறுதிவரை கால; நடையாய் மலை கடக்கணும்
ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி
பம்பையிலே நீராடி விளக்கேத்தணும்
ஐயன் நாமம் உள்ளத்திலே குடியேத்தணும்
பதினெட்டுப் படி ஏறி அவனைப் பாக்கணும்
பந்த‌ பாச‌ சுமைகளெல்லாம் நீ போக்கணும்
இருமுடியில் உள்ள‌ நெய்யை நீ படைக்கணும்
திருப்படியில் தேங்காயை நீ உடைக்கணும்
மகரஜோதி தரிசனத்தில் மனம் நிறையணு
மங்கலங்கள் நாளும் நாளும் பொங்கி வழியணும்
ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி