Achankovil Arase

Achankovil Arase

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா……
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா …….

Best deals from amazon today

சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா
சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியாள் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே வா
தர்மஞான‌ சாஸ்தாவே தயவுடனே நீ வா
மறைதேடும் சபரிமலை மன்னவனே நீ வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலகனே வா
மன்னவனே மணிகண்ட‌னே மகிழ்வுடனே வா
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா
தேவர்களும் உனைப்பணிய‌ காந்தமலையிலே நீ
ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை
நாவார‌ உனை அழைத்தோம் சுவாமியே
சரணம் ஐயப்பா (சாமி பொன்னய்யப்பா