Andru Ketpavan Arasan

Andru Ketpavan Arasan

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா

Best deals from amazon today

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
இதயம் குலைந்து தவிக்கிறான்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தன்னை அடித்தால் பழிக்கிறான்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
யாவும் அருள்வான் நம் இறைவன்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா இறைவா இறைவா