Yesuvai Nambi

Yesuvai Nambi

இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்
இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்து பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்
அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்
மெய்ச்சமாதானம் ரம்மியமும்
தூயதேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்