Yesu Naamam Potri

Yesu Naamam Potri

இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா
கிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா
ராஜாதி ராஜா இயேசு அல்லேலூயா அவர்
நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா
இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்
திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா
பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்
பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா
வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்
அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா