Thuthigalin Maththiyil

Thuthigalin Maththiyil

துதிகளின் மத்தியில் வாசம்
செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த
அவரை வாழ்வில் போற்றிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்
எரிகோவின் மதிலும் இடிந்து
விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து
நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்
பவுலும் சீலாவும் சிறையில்
துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில்
பாடுவார் துதியின் புதுப்பாடல்
மௌனத்தில் இறங்கும் மரித்தவர்
எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை
துதித்தே ஆராதிப்போம்