Theeya Manathai Maatra

Theeya Manathai Maatra

தீய மனதை மாற்ற வாரும்,
தூய ஆவியே - கன
நேய மேவியே
மாய பாசத் தழுந்தி வாடி
மாளுஞ் சாவிதால் - மிக மாயும்
பாவி நான்.
தீமை செய்ய நாடுதென்றன்
திருக்கு நெஞ்சமே, - மருள்
தீர்க்கும் தஞ்சமே
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு
கீதம் பாடவே, அவர்
கிருபை தேடவே
தேவ வசனப் பாலின் மீது
தேட்டம் தோன்றவே, - மிகு
தெளிவு வேண்டவே