Thean Inimaiyilum

Thean Inimaiyilum

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே
காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே.
பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே