Sollarum Meinyaanare

Sollarum Meinyaanare

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.
வல்லறஞ் சிறந்து மனுவானாரே, - உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே, - உரை
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.
மாடாயர் தேடும் வஸ்துபகாரி, - மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே, - அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே, - உரை
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.
அச்சய சவுந்தர அசரீரி, - அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா, - ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா, - உரை
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.
பாவ வினை யாவையுந் தீர்த்தாரே, - உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே,
செல்லமாய் முகம் பார்த்தாரே, - பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே, - உரை
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.