Raajan Tthaaveethooril Ulla

Raajan Tthaaveethooril Ulla

ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன்தன்னை
முன்னணையில் வைத்தாரே.
மாதா, மரியம்மாள்தான்;
பாலன், இயேசு கிறிஸ்துதான்.
வானம் விட்டுப் பூமி வந்தார்.
மா கர்த்தாதி கர்த்தரே;
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே.
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்;
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்.
பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்;
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்.
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்.