Pethalaiyil Piranthavarai

Pethalaiyil Piranthavarai

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட
சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்
தலைசாய்க்கலானார்.
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்
சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்.
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்
முன்னம் அவர் சொன்னபடி
முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத்
தாழ்ச்சியுள்ள முன்னணையிலே.
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்
ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களுட சத்தத்துக்கள்
அழுது பிறந்தார்.
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்
இந்தடைவாய் அன்புவைத்த
எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க
ஏகிடுவோமே.
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே - இன்னும்