Naanum En Veetarumo

Naanum En Veetarumo

நானும் என் வீட்டாருமோ வென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா
நானும் என் வீட்டாருமோ வென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா
கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை
இன்றே நீ தீர்மானம் செய்வாய்
நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும்
கண்டு நன்றியாய் சேவிப்பாயா
நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம்
கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா