Kurusinil Thongiye

Kurusinil Thongiye

குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.
சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ.
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க - ய+த
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?