Kirubai Purinthenai

Kirubai Purinthenai

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்
திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! - கிரு
பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து - கிரு
தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு - கிரு
தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி - கிரு
தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து - கிரு
அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த, - கிரு