Kartharin Panthiyil

Kartharin Panthiyil

கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
கர்த்தர் அன்பாய்ச் சொந்த
ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப்
பரணமாய் எண்ணி
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
ஜீவ அப்பம் அல்லோ?
கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ?
உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின்
ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன்
என்றும் பிழைத்திட
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
தேவ அன்பைப் பாரு
கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு
ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா
பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து
அன்னியன் ஆகாதே
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
அன்பின் விருந்தாமே
கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே
இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ
அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும்
இல்லாதிப்போதே வா
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.