Ennai Jeevapaliyaai

Ennai Jeevapaliyaai

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்,
ஏற்றுக் கொள்ளும், யேசுவே.
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்கத்தத்த மல்லாது, இப்போது - என்னை
அந்தகாரத்தி னின்றும், பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்.
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன், கருணைசெய், தேவா - என்னை
நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு,
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை - என்னை