Ekkala Saththam

Ekkala Saththam

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே
வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே சந்திப்போமே
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவர்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்