Chinanjiru Suthane

Chinanjiru Suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே
காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே
தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே
சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே
பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே