Azhaikirar Azhaikirar

Azhaikirar Azhaikirar

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண் கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்
நோயை ஏற்றவர் பேயை வென்றவர்
நீதிபரன் உன்நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
துன்பம் சகித்தவர் தூயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ
கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற்ற வாயனே வந்தழைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துன்னை அழைக்கிறார்