Arul Niranthavar

Arul Niranthavar

அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.
சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே@
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.
பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.
மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.