Anbe Anbe Anbe

Anbe Anbe Anbe

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!
ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா.
பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ?
அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே.
பரலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பசுவைப்போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா.
இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!