Aaviyai Arulume

Aaviyai Arulume

ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!
நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ?
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!
பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!