Aarivar Aararo

Aarivar Aararo

ஆரிவர் ஆராரோ கண்மணி
அன்பே என் ராஜாவே
ஆரிவர் ஆராரோ கண்மணி
அன்பே என் ராஜாவே
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே
உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே
உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே
ஆரிவர் ஆராரோ கண்மணி
அன்பே என் ராஜாவே
வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே
வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே
ஆரிவர் ஆராரோ கண்மணி
அன்பே என் ராஜாவே